பிரதமர் ஹரினி அமரசூரிய நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு எடுத்த தீர்மானத்திற்கு நன்றி தெரிவிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நாட்களில் பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று அங்கு மக்களைச் சந்தித்ததாக நாமல் கூறியுள்ளார்.
உடனடி நிவாரணம்
மேலும், அவர்களுக்கு உடனடி நிவாரணம் தேவை என்றும் நாமல் தெரிவித்துள்ளார்.

இதன்படி நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரிடம் நாமல் ராஜபக்ஷ சிறப்பு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறியுள்ளார்.

