விஜய் டிவியின் செல்லம்மா சீரியலில் நடித்து இருந்தவர் ஸ்ரேயா சுரேந்திரன். அவர் தற்போது மகளே என் மருமகளே என்ற தொடரில் நடித்து வருகிறார்.
அவருக்கு கடந்த ஜனவரி மாதம் ரோஹித் என்பவர் உடன் ஸ்ரேயாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருந்தது. ஒரு வருட காதலுக்கு பிறகு அவர்கள் நிச்சயதார்த்தம் செய்து கொள்வதாக அப்போது கூறி இருந்தனர்.

திருமணம்
இந்நிலையில் இன்று நடிகை ஸ்ரேயா சுரேந்திரன் மற்றும் ரோஹித் திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது.
திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகும் நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



