முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கெக்கிராவ தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றிய ஜனக் மகேந்திரா, உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் சீர்திருத்தப் பிரதி அமைச்சருமான முத்துக்குமாரண, சிறிது காலமாக சுகவீனமுற்றிருந்த நிலையில் நேற்று(17) மாலை காலமாகியுள்ளார்.

