டித்வா பேரனர்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு இன்று (19.12.2025) நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தக் குறைநிரப்பு மதிப்பீட்டை பிரதமர் நேற்று (18.12.2025) நாடாளுமன்றத்தில் சமர்பித்திருந்தார்.
அதற்கமைய, இன்று (19.12.2025) மு.ப. 10 மணி முதல் பி.ப. 6.10 வரை இது தொடர்பான விவாதம் இடம்பெற்றதுடன், 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீடு வாக்கெடுப்பு இன்றி நாடாளுமன்றில் அங்கீகரிக்கப்பட்டது.

