பிரதீப் ரங்கநாதன்
லவ் டுடே படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தனது முதல் படத்திலேயே ரூ. 100 கோடி வசூல் செய்தார்.

இதை தொடர்ந்து டிராகன் மற்றும் Dude ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ. 100 கோடியை கடந்து வசூல் செய்தன. அடுத்ததாக LiK படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த படம்
இந்த நிலையில், பிரதீப் ரங்கநாதனின் அடுத்த புதிய திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் தனது புதிய படத்தை இயக்கி ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

டாக்சிக் படத்தில் கியாரா அத்வானி நடிக்கும் ரோல் இதுதான்.. வெளிவந்த அறிவிப்பு
லவ் டுடே படத்திற்கு பின் பிரதீப், தானே இயக்கி ஹீரோவாக நடிக்கவிருக்கும் படம் இதுவே ஆகும். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் Sci-fi காதல் கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது என தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

