அகில இலங்கை தமிழ் தின முதுமலை கல்வி அலுவலக பிரிவுக்கான போட்டி நிகழ்ச்சிகள் மூதூர் -கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் இன்று சனிக்கிழமை (06) காலை இடம்பெற்றது.
இதன்போது மாணவர்களின் பாடல்,நடனம் என பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் இடம்பெற்றது.
இவ் தமிழ் தின போட்டியில் மூதூர் வலய கல்வி அலுவலக பிரிவிலுள்ள தோப்பூர், தோப்பூர், ஈச்சிலம்பற்று கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக மூதூர் வலய கல்வி பணிப்பாளர் ஏல். எல்.சிராஜ் கலந்து சிறப்பித்தார்.
ஏனை அதிதிகளாக மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதி கல்விப் பணிப்பாளர்களான T.ஜெயந்தன்,ஹாபிஸ் மரைக்காயர்,எம்.ஜே.எம்.றிப்கா ,வலயக் கல்விஉதவிக் கல்விப் பணிப்பாளர்களான பீ.கருனாகரன்,பீ.ஜஹாங்கிர் தோப்பூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.முபாஸ்தீன்,மூதூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ரஹீம்,மூதூர் வலய கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

