அனுராதபுரத்தில் (Anuradhapura) இன்று(16) மாலை நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது 2.7 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் மற்றும் கந்தளாய் பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பணியகம் மேலும், குறிப்பிட்டுள்ளது.

Source: https://ibctamil.com/article/today-earthquake-in-sri-lanka-1721138234?itm_source=parsely-popular

