இலங்கையில் ஆட்சியாளர்களின் ஆதரவுடன்,ஆலோசனையுடன் பல்வேறு கொலை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(26.04.2024) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் திருப்பலியில் கலந்துகொண்ட போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதேபோன்று 2006 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொழும்பில் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லபட்டார்.
இவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும்போதே கொலை செய்யப்பட்டனர்.”என கூறியுள்ளார்.
இந்த கொலைகள் தொடர்பில் அவர் கூறிய விடயங்களை காணொளியில் முழுமையாக காணலாம்,
Source: https://tamilwin.com/article/m-p-murder-in-sri-lanka-charlses-nirmalanathan-1714175527

