ஜனாதிபதி தேர்தலில் முல்லைத்தீவு கடற்றொழிளாளர் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்கவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் சம்மேளன ஊடக பேச்சாளர் வி.அருள்நாதன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“கடற்றொழிளாளர் சமூகம் அண்மையில் ஜனாதிபதியினை சந்திப்பதற்காக கொழும்புக்கு சென்றிருந்தோம். அங்கு இலங்கையின்
எல்லா மாவட்டங்களிலும் இருந்து எண்ணாயிரம் வரையான கடற்றொழிளாளர் வந்திருந்தார்கள். முல்லைத்தீவு
மாவட்டத்தில் இருந்தும் நாங்கள் சென்றிருந்தோம்.
கடற்றொழிளாளர்களுக்காக நல்ல செயற்பாட்டினை மேற்கொண்டுள்ள அவருக்கு நாங்கள் நன்றி செலுத்த வேண்டும்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
மேலதிக தகவல் – தவசீலன்
Source: https://tamilwin.com/article/support-for-ranil-mullaitivu-fishermen-1723533294

