5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளின் போது ஏற்படும் அனர்த்த நிலைமைகள் குறித்து தகவல் தெரிவிக்க, 5 தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்த பேரிடர் மேலாண்மை மையம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முப்படைகள் மற்றும் பொலிஸாரின் தொடர்ச்சியான ஆதரவுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேரிடர் மேலாண்மை மையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
இதற்கமைய, அனைத்து தரப்பினரையும் ஈடுபடுத்தி, பேரிடர் மேலாண்மை மையம் ஒரு சிறப்பு திட்டத்தைத் தயாரித்துள்ளது.
5 புதிய தொலைபேசி எண்கள் அறிமுகம்
இந்த திட்டம் பரீட்நைக்கு முன்பும் பின்பும் நடைமுறையில் இருக்கும் என்றும், பேரிடர் ஏற்படும் பட்சத்தில், மாணவர்களை பரீட்சை மையங்களுக்கு அழைத்துச்செல்லவும், வினாத்தாள்களைக் கொண்டு செல்லவும், அதிகாரிகள் தங்கள் கடமைகளை ஆற்றவும் தேவையான வசதிகளை ஏற்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பரீட்சைக்கு முந்தைய நாள் 5 புதிய தொலைபேசி எண்கள் வழங்கப்படும் என்றும், மேலும், 117 என்ற தொலைபேசி எண்ணும் செயல்பாட்டில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து தங்கள் பணிகளை தொடரத் திட்டமிடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
Source: https://tamilwin.com/article/phone-numbers-of-emergency-examination-period-1786007689

