முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர்

புதிய இணைப்பு 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து மாகாண ஆளுநர்கள் பலர் பதவி விலகியுள்ளனர்.

அந்தவரிசையில், மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் மூலம் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணம் மற்றும் மேல்மாகாண அரச சேவையின் முன்னேற்றத்திற்காகவும் மேல் மாகாண மக்களின் நலனுக்காகவும் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக தாம் மிகுந்த பலத்துடன் செயற்பட்டதாக அவர் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

மூன்றாம் இணைப்பு

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தொடர்ந்து அமைச்சர்கள் உள்ளிட்ட பலர்பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது ஆளுநர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

இரண்டாம் இணைப்பு 

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் நேற்று (22) தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆளுநர் தனது பதவி விலகல் கடிதத்தை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்திருந்தார்.

இதன்மூலம் பதவி விலகிய ஆளுநர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

முதலாம் இணைப்பு

ஜனாதிபதி தேர்தலில் ரணிலின் தோல்வியை அடுத்து நான்கு ஆளுநர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

அதற்கமைய, வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்(Mahipala Herath) மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திசாநாயக்க (Naveen Dissanayake)ஆகியோர் தமது ஆளுநர் பதவிகளில் இருந்து விலகியவர்களாவர்.

ஊவா மாகாண ஆளுநர்

அத்துடன் ஊவா மாகாண ஆளுநர் அநுர விதானமகே(Anura Widanamage) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

இது தொடர்பான கடிதம் ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் மற்றும் நாட்டின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தென் மாகாண ஆளுநரும் பதவி விலகினார் 

இதேவேளை தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன(Lakshman Yapa Abeywardena) நேற்று (22) தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

ஜனாதிபதிக்கு அவர் எழுதிய கடிதத்தில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான சாத்தியக்கூறுகளால் தான் பதவி விலக தூண்டப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பிரதமரும் விலகினார்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தோல்வியடைந்ததை அடுத்து பிரதமர் பதவியிலிருந்து தினேஸ் குணவர்தன(Dinesh Gunawardene)  விலகியுள்ளார்.

பதவி விலகினார் மேல் மாகாண ஆளுநர் | Two Governors Resigned

அதேபோன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களும் பதவி விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Gallery

Source: https://ibctamil.com/article/two-governors-resigned-1727070692?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.