முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி

புதிய இணைப்பு

மாவீரர் நாளை முன்னிட்டு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.
சிவாஜிலிங்கம் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளார்.

உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் அவர் இந்த அஞ்சலி நிகழ்வுகளை
வழமை போன்று மேற்கொண்டுள்ளார்.

நவம்பர் 27 இல் நினைவெழுச்சி நாள் கடைப்பிடிக்கப்படுவதற்கு காரணமாக
இருக்கும் முதல் மாவீரான சங்கர் என
அழைக்கப்படும் செல்வச்சந்திரன் சத்தியநாதனின் கம்பர்மலையில் உள்ள பூர்வீக
இல்லத்துக்கு முன்பாக ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சங்கரின் அன்னை  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்  உட்பட்ட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அத்துடன், நேற்றைய தினம் அனைத்து இடங்களிலும் சிவாஜிலிங்கம் தலைமையில்
மாவீரர்கள் நினைவாக ஈகை சுடரேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

முதலாம் இணைப்பு

யாழில் (Jaffna) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த
தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவிஜிலிங்கம் (M.K Shivajilingam) மற்றும் அப்பிரதேச மக்கள் ஒன்று திரண்டு பிரபாகரனுக்கு கேக் வெட்டியும், இனிப்பு மற்றும் மரக்
கண்றுகள் வழங்கியும் பிறந்த தினத்தைக் கொண்டாடினர்.

காவல்துறையினர் தெரிவிப்பு 

பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும்
அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

இதன்போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை காவல்துறையினர் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும்,
அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் அந்த புகைப்படத்தினை நீக்கிவிட்டு உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப
பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விவுகளை நடத்துங்கள் என்று பொது மக்களிடம் கோரிக்கை
விடுத்திருந்தனர்.

 70 மரங்கள் நடப்பட்டன

இந்தநிலையில் அந்தக் கோரிக்கையினை ஏற்ற மக்கள் தலைவர் பிரபாகரனின் படத்தினை அகற்றிவிட்டு சிறப்பான முறையில் பிறந்த தின நிகழ்வினை நடத்தினர்.

கொட்டும் மழைக்கு மத்தியிலும் எம்.கே. சிவாஜிலிங்கம் மாவீரர்களுக்கு அஞ்சலி | Ltte Leader S Birthday Celebrated In Jaffna Vvt

மேலும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70 ஆவது பிறந்த தினத்தை பிரதிபலிக்கும் வகையில்
அவருடைய வீட்டு வளாகத்திற்குள் சிறுவர்கள் மற்றும் பொது மக்களால் 70 மரங்கள்
நடப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் 70 மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் மற்றும் 70 தென்னை மரக்
கன்றுகள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery

Source: https://ibctamil.com/article/ltte-leader-s-birthday-celebrated-in-jaffna-vvt-1732611946?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.