ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன், சிபாரிசு கடிதங்கள் மூலமும் பின் கதவால் சொல்லப்படுகின்ற விடயங்கள் மூலமுமே அப்பதவியை பெற்றார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜனாதிபதி சட்டத்தரணி பதவியை படித்து பட்டம் வாங்கி பெறுவதாக நினைத்து கொள்ளாதீர்கள். அது ஜேபி அதிகாரிகளுக்கு நியமனம் வழங்குவது போன்றது தான்.
அப்பதவியை பெறுவதற்கு, நான், 20, 25 வருடங்களாக சட்டத்தரணியாக இருக்கிறேன், என்னை ஜனாதிபதி சட்டத்தரணியாக ஆக்குங்கள் என ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்ப வேண்டும்.
பிறகு, அதனை பரிசீலித்து அதனுடன் அனுப்புகின்ற சிபாரிசு கடிதங்கள், சான்றிதழ்கள் பார்த்து, மற்றும் பிற்கதவாலே சொல்லப்படுகின்ற விடயங்களையும் சேர்த்து அப்பதவியை கொடுப்பார்கள்.
முன்னதாக, 5 அல்லது 6 பேருக்கு அப்பதவி வழங்கப்பட்டது. யுத்த முடிவிற்கு பின்னர், ஒரு தமிழர், நாலைந்து முஸ்லிம் மீதமெல்லாம் சிங்களவர்கள் என 60 பேருக்கு மகிந்த ராஜபக்ச வழங்கினார் ” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
Source: https://tamilwin.com/article/srikantha-blames-about-sumanthiran-1726583695

