ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விடயத்தனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission of Sri Lanka) தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க (R.M.A.L. Rathnayake) தெரிவித்துள்ளார்.
குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் வெளிப்படுத்தப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சட்ட நடவடிக்கை
அத்துடன், அந்த அறிக்கைகள் குறித்து எவருக்கேனும் சிக்கல்கள் காணப்படின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் 14ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில், தபால் மூல வாக்களிப்பு ஐந்து நாட்கள் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/president-candidate-expenditure-reports-release-1729740812

