தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (01) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து
ஒரு பாரவூர்தி, இரண்டு வான்கள் மற்றும் ஒரு கார் ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
எனினும் காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

