இஷாரா செவ்வந்தியுடன் நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் கம்பகா பாபாவும் ஒருவர். அவரிடமிருந்து கொலை முயற்சி தொடர்பான தகவல்களை களனி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
கெரவலபிட்டிய அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட சுமார் ஐம்பது T56 உயிருள்ள தோட்டாக்கள் கம்பகா ஒஸ்மானைக் கொல்ல கெஹல்பத்தர பத்மே தயாரான போது தமக்கு வழங்கப்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சிக்கிய தோட்டாக்கள்
மேலும், உரிய வெடிமருந்துகளை கையிருப்பில் வைத்திருக்குமாறும், தேவைப்படும் போது அவற்றை மீண்டும் பெற்றுக் கொள்வதாகவும் கெஹல்பத்தர பத்மே கூறியதாக கம்பகா பாபா வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் கம்பகா பாபா நாட்டில் தங்கியிருந்த காலத்தில் ஆடம்பர வீடுகளில் தங்கியிருந்ததாகவும், ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மாத வாடகை அடிப்படையில் இவர் தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெஹல்பத்தர பத்மே வீடுகளுக்கான வாடகையை செலுத்தியதாக விசாரணை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
கம்பகா பாபா மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.