எல்ல – கரடகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்ந்துவரும் 10 குடும்பங்கள் மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்துள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் இந்திக்க கயான் பத்திரன தெரிவித்துள்ளார்.
குறித்த இடத்தில் நிலம் விரிசல் ஏற்பட்டுள்ளதால் 10 குடும்பங்களும் இன்று (24.04.2024) பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வறண்ட காலநிலை
மேலும், இந்நாட்களில் மழை பெய்யாவிட்டாலும், வறண்ட காலநிலை நிலவி வருவதால், மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த குடும்பங்கள் தற்போது உறவினர் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Source: https://tamilwin.com/article/badulai-10-families-evicted-from-all-areas-1713955731

