இஸ்ரேலிய (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் (Benjamin Netanyahu) வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து இன்றையதினம் (19.10.2024) இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
விமான தாக்குதல்
இந்த ஆளில்லா விமான தாக்குதல் லெபனானில் இருந்து ஏவப்பட்டுள்ளது என பிரதமரின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதல் நடத்த சமயத்தில் நெதன்யாகு அந்த இல்லத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் (Iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ali Khamenei) இஸ்ரேல் மிது தாக்குதல் நடாத்துவதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

