நாங்கள் மிக அன்புடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் வேலை செய்கின்றோட் எனவும், அவர் எமக்கு அரசியலில் கிடைத்த பெரும் சொத்தாகும் என அமைச்சர் மற்றும் நாடாளுமன்றச் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “அவருடன் மிக நெருக்கமாக செயற்படுகிறோம், எமது அரசாங்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது.
சஜித் மற்றும் நாமல் ஆகியோர் அழுது கொண்டு இருக்க வேண்டியது தான், குறித்த ஐந்த வருடங்களை சரியாத செய்த பின்னர் மீண்டும் ஆட்சியை நாம் பிடிப்போம்.
அரசாங்க நிறுவனம்
பிரதமருக்கு அவருடைய அமைச்சை பார்க்கிலும் வேறும் அமைச்சுக்கான கேள்விகளுக்கு பதலளிக்க வேண்டும்.
ஆதலால் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு காலம் கடத்தாமல் பதிலளிக்கும் முகமாகவே முதலில் வழங்கிய தகவல்களை குறிப்பிட தீர்மானித்தோம்.
அப்போது கூட அவர்,என்னிடம் கேட்டார் தகவல்கள் சரியானவையா என்று ? அரசாங்க நிறுவனங்களில் சிலர் இன்னும் இருக்கிறார்கள் ராஜபக்சர்களுடன் இணைந்து திருட்டில் ஈடுபட்டவர்கள்.
சாதாரண விடயம்
அவர்கள் தகவல்களில் அடங்கியுள்ள எண்களில் மாற்றங்களை ஏற்படுத்துகிறார்கள், குறித்த தகவல்களை தயாரித்து அனுப்பியவரே சொல்லியிருக்க கூடும்.
பதில் வந்துவிட்டு கேட்குமாறு, அதன் பிறகு தான் மஹிந்த சமரசிங்க அதில் இருந்த பிழைகளை சுட்டிக்காட்டினார், இவை சாதாரண விடயமாகும்.
2005 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் விலாசம் இல்லாமல் இருந்த சஜித்-ரணில் ஆகையத்தால் இருந்தாவது ஆட்சி கிடைக்குமா என எதிர்பார்த்த இவர்கள் சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.