கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டியில் காயங்களுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது ஒரு கொலையா என்பதை அறிய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

