எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தகவலை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Comission of Sri Lanka) அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
தேசிய அடையாள அட்டை
இதன்படி, தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்துடன், செப்டம்பர் 4ஆம் திததி மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/election-commision-press-release-tamil-postal-vote-1724997540

