முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச
காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) புதன்கிழமை
காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் “வளமான
நாடு – அழகிய வாழ்வு” எனும் தொனிப்பொருளில் கமத்தொழில், கால்நடை வளங்கள்,
காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு
ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இலவச காணி பத்திரங்கள்

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில்
300 இலவச காணி பத்திரங்களும், யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர்
பிரிவில் 32 இலவச காணி பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி
பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

மேலும் குறித்த திட்டத்தின் முதலாவது நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்
கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் –
கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன்,
காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர்  சுசில் ரணசிங்க, யாழ் –
கிளிநொச்சி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர்
நா.வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால்,
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க
அதிபர் ம.பிரதீபன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின்
அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி
மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள்,
கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் சிங்கம் சக மகர உற்சவம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.