முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandhu Tennakoon) உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜனவரி 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) உள்ளிட்டோரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

யசந்த கோதாகொட, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றையதினம் (22.11.2024) இந்த மனு அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

 

ஜனாதிபதி சட்டத்தரணி 

பொல்துவ சந்தியில் தேசிய மக்கள் சக்தியின் பெண்கள் குழுவினர் நடத்திய அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தி தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியதாகக் கூறி அப்போதைய பதில் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் குழுவிற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தாக்கல் செய்த மனு: விசாரணை குறித்து உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Fundamental Rights Petition Filed The P M

இந்நிலையில் மனுதார் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒரு குழுவினருக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் வழக்கு நடந்து வருவதாகவும், வழக்கை மீளப்பெற்றால் இந்த மனு தொடரப்படவேண்டுமா போன்ற விடயங்கள் தொடர்பில் முடிவெடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதன்போது, ​​சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன், இது தொடர்பில் பிரதிவாதிகளுடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, மனுவை எதிர்வரும் ஜனவரி 30-ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிட்ட மூன்று நீதிபதிகள் அமர்வு, அன்றைய தினம் இந்த வழக்குகளின் முன்னேற்றம் குறித்து இருதரப்பு வழக்கறிஞர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21

Source: https://ibctamil.com/article/fundamental-rights-petition-filed-the-p-m-1732272304?itm_source=parsely-popular

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.