இன்று (11) நள்ளிரவுக்குப் பிறகு இடம்பெறும் 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால் காவல்துறையினருக்கு தகவல் அளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி காலப்பகுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான (GCE (O/L) மேலதிக வகுப்புகள் நடத்தப்பட்டால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை தலைமையகம் – 0112421111
காவல்துறை அவசர இலக்கம் – 119
இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் – 1911
பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளை – 011 278 4208 / 011 278 4537
2024
நள்ளிரவு முதல் தடை
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் நடாத்தப்படும் அனைத்து மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், சமூக ஊடகங்கள் அல்லது பிற மின்னணு ஊடகங்கள் மூலம் உதவி வழங்குதல், மார்ச் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக தேர்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி அறிவித்திருந்தது.
இம்முறை, 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மார்ச் 17 முதல் 26 வரை 3663 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் தபால் திணைக்களத்திற்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை அனுமதி அட்டைகள்
இதன்படி, பாடசாலை மாணவர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கும், தனியார் பரீட்சார்த்திகளின் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அனுமதி அட்டைகளில் ஏதேனும் மாற்றங்களை செய்ய விரும்பினால் www.doenets.lk ஊடாக 2025 மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதனை செய்ய வேண்டும் என அமித் ஜயசுந்தர கூறியுள்ளார்.
மேலும், அனைத்து பாடசாலை அதிபர்களிடமும் அனுமதி அட்டைகளை மாணவர்களுக்கு விரைவாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகள் இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்திடம் நேரடியாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.