முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள்: அகழ்வு பணி தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்பு

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்துள்ளது.

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது, மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

இரு புதிய ஆளுநர்கள் நியமனம்

இரு புதிய ஆளுநர்கள் நியமனம்

அகழ்வு பணிகள்

அதன் அடிப்படையில் இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் துறை அதிகாரி மணிமாறன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள், பொலிஸார், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

யாழில் மீட்கப்பட்ட மனித எலும்பு கூட்டு எச்சங்கள்: அகழ்வு பணி தொடர்பில் வெளியான தகவல் | Human Assemblage Remains Recovered In Jaffna

அகழ்வின் போது பெண்ணொருவரினுடையதாக கருதப்படும் எலும்புக் கூடு முழுமையாக மீட்கப்பட்டது. எலும்புக் கூடுடன் செப்பு நாணயங்கள், துணி , அரிசி துகள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி முன்னைய காலத்தில் மயானமாக இருந்திருக்கலாம் என்றும் குறித்த பெண்ணின் உடல் இந்து முறைப்படி கிரியை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் மீட்கப்பட்ட எலும்புக் கூடு மற்றும் ஏனைய சான்றுப் பொருட்களை பார்வையிட்ட நீதவான் இது தொடர்பான பகுப்பாய்வு பரிசோதனையை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க சட்ட மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து அப்பகுதியில் அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்ததுடன் மீட்கப்பட்டுள்ள எலும்புக் கூடு மற்றும் சான்றுப் பொருட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல்: விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

குளியாப்பிட்டிய இளைஞர் கடத்தல்: விசாரணையில் சிக்கிய காதலியின் பெற்றோர்

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) – புங்குடுதீவில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

குறித்த இடத்தில், இன்றையதினம் (02.05.2024) ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி, சட்ட வைத்திய அதிகாரி உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த
பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்திற்கு இஸ்ரேல் எதிர்ப்பு

நீதிமன்ற அனுமதி 

இதன்போது, அண்மையில் ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டியதில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

இதனை தொடர்ந்து, கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில்
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டது. 

இதற்கமைய, சம்பவ
இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவ்விடத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க ஊர்காவற்றுறை நீதவான்
நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

இந்நிலையிலேயே, இன்றையதினம் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில்
அகழ்வு பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

ஒரு டிக்கெட்டால் மேடையில் வைத்து பறிபோன அனுரவின் மரியாதை

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.