வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு ஒன்றை இயக்கச்சியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை வழங்கியுள்ளது.
இதன்படி, றீ(ச்)ஷாவின் மாபெரும் தொழிற்சந்தை ஒன்று 30.04.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
வேலைவாய்ப்புகள்
இதன்போது சுமார் 250க்கும் மேற்பட்ட தொழில் முனைவோருக்கான வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.
றீ(ச்)ஷா பண்ணையில், வன்பொருள் பொறியாளர்(Hardware Engineer), துப்புரவு பணியாளர்கள்(Cleaning Staff), விற்பனை மற்றும் நிர்வாக ஊழியர்கள்(Sales and Administrative Staff) மற்றும் விருந்தினர் வழிகாட்டி(Guest guide) என பல துறைகளில் வெற்றிடங்கள் காணப்படுவதுடன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நிலையில்,வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பவர்கள் உங்களது சுயவிபரக்கோவையினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 070 777 2351 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கோ அனுப்பி வைக்க முடியும்.
கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து எடுக்கப்பட்டுள்ள அதிரடி முடிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |