கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடையில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்றையதினம்(07.02.2025) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, கலோலுவ பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.