யாழில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்து கொண்ட நிகழ்வில் வடக்கு அதிகாரிகள்
ஆழ்ந்த நித்திரையில் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை முடிவுகளின் பிரகாரம் வடக்கு
மாகாணம் பின் தள்ளப்பட்டமை தொடர்பில் பிரதமர் தலைமையில்
உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று வடக்கு மாகாண சபை
கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அசமந்த போக்கு
இதன் போது பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய உரையாற்றிக்
கொண்டிருந்த நிலையில் சில கல்வி உயர் அதிகாரிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தமை
அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் வடக்கு கல்வி நிலை பின்னோக்கி செல்வதற்கு
அதிகாரிகளின் அசம்பந்தப் போக்கே காரணம் என குறிப்பிட்டமையும் குறிப்பிடத்தக்கது.