எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் சிங்கள பிரதேச
சபையில் மாத்திரம் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த
ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுன இன்று(20) தாக்கல் செய்தது.
வவுனியா மாவட்டத்தில் ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளநிலையில் சிங்கள
பிரதேசசபையில் மாத்திரம் குறித்த கட்சி இம்முறை போட்டியிடவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த முறையும் மொட்டுவே ஆட்சியை பிடித்தது
இதேவேளை கடந்த உள்ளூராட்சி தேர்தலில் சிங்கள பிரதேசசபையின் ஆட்சி அதிகாரத்தை
பொதுஜன பெரமுன கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.