தமிழர் தாயக பகுதியில் தொடர்ந்தும் ஈழத்தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்துவதில் தொடர்ச்சியாக ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத இயந்திரம் மிக மோசமான நகர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.
நிம்மதியாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் நிலைப்பாட்டை தினம் தினம் சீர்குலைத்து தமிழர் நிலங்களையும் வாழிடங்களையும் வழிபாட்டிடங்களையும் தொடர்ந்தும் கைப்பற்றி வருவதில் அரச ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது இந்த நிலம் பிடிக்கும் கூட்டம்.
இந்த விவகாரத்தில் தொல்லியல் துறையையும் ஏனைய அரச கட்டமைப்புகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் பெற்ற இரண்டு இரண்டு பிக்குகள் தொடர்பிலும் அவர்களின் கீழ் இருப்பவர்கள் நேற்றைய நாளில்
திருகோணமலையிலும் வவுனியாவிலும் நிகழ்த்திய அட்டூழியங்களையும் கடந்த நிலம் பிடித்த கதைகள் பற்றியும் ஒரு ஆழமான பார்வையை முன்வைக்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
https://www.youtube.com/embed/hk9btkP-AHQ