நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயற்பட்டு வருவதாக நம்பப்படும் ஏ.டி.எம் அட்டை
மோசடி சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிசார்
நாடுகின்றனர்.
பொது மகன் ஒருவரின் ஏ.டி.எம் ஊடாக 200,000 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தை
அடுத்தே இந்த உதவி கோரப்பட்டுள்ளது.
பொலன்னறுவை- ஜெயந்திபுராவில் வசிக்கும் பாதிக்கப்பட்டவர், ஆகஸ்ட் 19, 2025
அன்று களுத்துறை நகரில் உள்ள ஒரு ஏடிஎம்மிற்கு பணம் எடுக்க சென்றுள்ளார்.
மோசடி
பணம் எடுக்க ஏ.டி.எம் மையத்தில் இருந்த ஒருவரின் உதவியை கோரியுள்ளார்.பரிமாற்றத்தின் போது, பாதிக்கப்பட்டவர் தனது ஏடிஎம் அட்டை மற்றும் PIN
குறியீட்டை, குறித்த நபரிடம் வழங்கியுள்ளார்.

இதன்போது, சந்தேக நபர், உதவி என்ற போர்வையில், சம்பவ இடத்தை விட்டு
வெளியேறுவதற்கு முன்பு அசல் அட்டையை, பாதிக்கப்பட்டவரிடம் இருந்து மோசடியான
முறையில் மாற்றிக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணை
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர் பின்னர் தனது அசல் அட்டையைப் பயன்படுத்தி,
குறித்த நபர், தனது கணக்கிலிருந்து 200,000 ரூபாய் மோசடியாக எடுக்கப்பட்டதை
பின்னரே அறிந்து கொண்டார்.

இதேவேளை விசாரணைகளில், சந்தேக நபர் களுத்துறை தெற்கு மற்றும் வாதுவ பொலிஸ்
நிலையங்களில் முன்னர் பதிவு செய்யப்பட்ட குறைந்தது நான்கு ஒத்த
முறைப்பாடுகளுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

