பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க ரூ.10 பில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று(05.12.2025) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துவிட்டதால், இழப்பீட்டை ரொக்கமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், சமீபத்திய புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

