நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.
கல்வி நடவடிக்கைகள்
அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் மே மாதம் 14 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/s0h7u8esSUg

