முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாணவர்களுக்கான தரமற்ற அரிசி கையிருப்பு விவகாரம் – செயலகம் விளக்கம்

புதிய இணைப்பு

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது.

அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே மேற்படி அலுவலகம் இந்தப் பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

பாடசாலை உணவு திட்டத்தில் விநியோகிப்பதற்காக கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள்
பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால், வெயாங்கொடை களஞ்சியசாலை
வளாகத்தில் இருந்து, மனித பாவனைக்கு ஏற்றதாக கருதப்படும் அரிசி இருப்புக்களை
மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மாணவர்களுக்கான தரமற்ற அரிசி கையிருப்பு விவகாரம் - செயலகம் விளக்கம் | Shocking News School Students Food Rice Quality

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
ஆகியவற்றின் பகுப்பாய்வு அறிக்கைகளையும் ஜனாதிபதி அலுவலகம் கோடிட்டுள்ளது.

நெறிமுறையின்படி, மத்திய களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்பை அந்தந்த
மாகாணங்களுக்கு விநியோகிப்பதற்கு முன், மாகாண கல்வித் திணைக்களத்தின் மூத்த
அதிகாரி மற்றும் மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது சுகாதார
பரிசோதகர், குறித்த அரிசி, மனித நுகர்வுக்கு ஏற்றதா என்பதை உறுதிப்படுத்துவது
கட்டாயமாகும். 

இதன்படி, அவர்களின் கையொப்பங்கள் மூலம் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தப்பட்ட
பின்னரே, அரிசி இருப்புக்கள் அந்தந்த மாகாணங்களுக்கு விடுவிக்கப்படுகின்றன
என்றும் ஜனாதிபதி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த தரமற்ற அரிசி கையிருப்பு தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (Public Health Inspectors Union SriLanka) தகவல் வெளியிட்டுள்ளது.

மாணவர்களுக்கான தரமற்ற அரிசி கையிருப்பு விவகாரம் - செயலகம் விளக்கம் | Shocking News School Students Food Rice Quality

வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசியே இவ்வாறு பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளதாக சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்காலிகமாக இடைநிறுத்தம்

பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி இருப்பு பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான தரமற்ற அரிசி கையிருப்பு விவகாரம் - செயலகம் விளக்கம் | Shocking News School Students Food Rice Quality

குறித்த களஞ்சியசாலையில் இருந்த அரிசி பாடசாலை மாணவர்களின் போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் ( World Food Programme) மூலம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, குறித்த களஞ்சியசாலையில் இருந்து அரிசி இருப்புக்களை விடுவிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.