அண்மைக் காலங்களாக சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் இன நல்லுறவை குழப்பும் வகையிலான செய்திகள் அதிகமாக பகிரப்படுவதாக அம்பாறை (Ampara) மாவட்டத்தில் உள்ள சமூக தலைவர்கள் ஒன்றிணைந்து குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அம்பாறை மாவட்ட சமூக ஒருங்கிணைப்பினை முன்னெடுப்பதற்கான பிராந்திய மையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்,
சமூக ஊடகங்களின் ஆதிக்கம் தற்போது எம் சமூகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இனங்களுக்கு இடையே பிழையான செய்திகள் அதிகமாக பகிரப்படுகின்றன.
இவ்வாறான நிலையில் சரியான தகவலை வழங்க கூடியதாக சிவில் சமூக அமைப்புக்களிடம் உரிய தரப்பினர் உண்மையான செய்திகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலமாக கசப்பான சம்பவங்கள் சமூகங்களிடையே இடம் பெறுவதை தவிர்த்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்,
Source: https://tamilwin.com/article/social-media-disturbing-race-harmony-1714721721

