முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர்

எந்த காரணத்திற்காகவும் பிரதமர் பதவியில் மாற்றத்தை மேற்கொள்ள நாம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசுக்குள்
எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை
ஒற்றுமையுடன் ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது.

எனவே, சஜித் பிரேமதாஸவும்
நாமல் ராஜபக்சவும் பகல் கனவு காணாது அவர்களது கட்சிகளைப் பாதுகாத்துக்
கொள்வதில் அவதானம் செலுத்துவதே பொறுத்தமானது  என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சஜித் மற்றும் நாமலின் பகல் கனவு

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர் | Sri Lanka Npp Government Internal Issue

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

அரசுக்குள் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. அது எதிர்க்கட்சிகளின் பகல்
கனவாகும். அரசில் முற்போக்கானவர்களை இணைத்துக் கொண்டு ஆட்சியமைக்கத் சஜித்
தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இவை சில ஊடகங்களால்
உருவாக்கப்படும் செய்திகளாகும்.

ஆனால், அவ்வாறு எந்தச் சூழலும் அரசில் இல்லை. எந்தக் காரணத்தை அடிப்படையாகக் கொண்டும் பிரதமரைப் பதவி நீக்க நாம்
எதிர்பார்க்கவில்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக அமைச்சரவை ஒற்றுமையுடன்
ஒருமித்துச் செயற்பட்டு வருகின்றது.

ஒவ்வொரு அமைச்சுக்கள் தொடர்பிலும்
புரிதலுடன் செயற்பட்டு வருகின்றோம். “நீங்கள் உங்கள் கட்சிகளைப் பார்த்துக்
கொள்ளுங்கள், நாம் பிளவுபடுவோம் எனப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரயோசனம்
இல்லை” என்று சஜித்திடமும், நாமலிடமும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை வெளியிட்ட அமைச்சர் | Sri Lanka Npp Government Internal Issue

இதற்கு முன்னரும் ஜே.வி.பி., என்.பி.பிக்கு இடையில் முரண்பாடுகள்
காணப்படுவதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டன. லால்காந்த அரசிலிருந்து விலகுவார்
எனக் கூறினர். இவ்வாறான வதந்திகள் இரு நாட்கள் மாத்திரமே பெரிதாகப்
பேசப்படும். ஆனால், அவற்றால் எவ்வித பிரயோசனமும் இல்லை.

நாம் நாட்டின்
பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதோடு, அரசியல் கலாசாரத்தையும் மாற்றுவோம்.

அவற்றைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்குமாறு எதிர்க்கட்சிகளிடம்
கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது பொய்களுக்குப் பதிலளிப்பது பிரயோசனமற்றது.
ஆளுந்தரப்பிலுள்ள 159 உறுப்பினர்களும் முற்போக்கானவர்களே என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.