யாழ்ப்பாணத்தில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை எழுதிவிட்டுத் திரும்பிய
மாணவகர்ளிடம் உயர்தர வகுப்புகளுக்கான விளம்பரக் கையேடுக ளைப்
பெற்றுக்கொள்ளுமாறு மர்ம நபர்கள் நேற்று பலவந்தமாகத் திணித்ததால் மாணவர்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
வன்முறைக் குழுக்களில் உள்ளவர்களைப் போன்ற தோற்றத்தில் இருந்த அவர்கள்,
மாணவிகளுக்கு நெருக்கமாகவும், அவர்களின் கைகளைப் பிடித்து இழுப்பது போன்றும்
நடந்துகொண்டமை பார்ப்போரை முகம் சுழிக்க வைத்துள்ளது.
உரிய அதிகாரிகள் விசாரணை
இந்த அத்துமீறலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் பிரதேச செயலகங்களுக்கு
பெற்றோராலும், சமூக நலன்விரும்பிகளாலும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டதைத்
தொடர்ந்து, சம்பவம் இடம்பெற்ற பகுதிகளுக்கு, பிரதேச செயலகங்களின் உரிய
அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், மாணவர்கள் பாதுகாப்பாக வீடு
திரும்புவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.