அநுராதபுரம் சிறைச்சாலைக்கு முழுக்கைதிகளும் மாற்றப்பட்டு நிமலரூபன்,டில்ருக்சன் போன்ற தமிழ் அரசியல் கைதிகளான இருவரையும் அழைத்து அடித்தே கொன்ற சம்பவம் பதிவுகளாக உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார் குரலற்றவர்களின் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன்.
இந்த சம்பவங்கள் வெளியில் இதுவரை வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் இருந்து அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக அழைத்துச் சென்று இறுதியில் அவர்கள் இருவரையும் சடலங்களாக ஒப்படைத்த துயரம் மிகுந்த சம்பவங்களும் நடந்தேறியுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தெரிவித்த மேலும் பலம னதை உருக்கும் சம்பவங்கள் தொடர்பான விபரங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/E4uUW50LtFU