கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரின் (ramalingam chandrasekar)செயற்பாடு தொடர்பில் பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் என்ற அகங்காரம் இல்லாமல் மக்களோடு மக்களாக நின்று அவர் தனது கருமத்தை ஆற்றியதற்காகவே பலரும் பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.
இதன்படி கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கண் சிகிச்சைக்காக, இன்று (19) புதன்கிழமை சென்றிருந்தார்.
காத்திருந்த அமைச்சர்
இதன்போது மக்கள் கண் சிகிச்சை பெற நின்ற நிலையில் அவரும் நெடுநேரம் வரிசையில் காத்திருந்து தனக்குரிய இலக்கம் வந்த பின்னர் வைத்தியரை சந்தித்தார்.
அமைச்சராக இருந்த போதிலும் தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தாது, ஏனைய நோயாளிகளுடன் வரிசையில் நின்று அமைச்சர் சிகிச்சை பெற்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்.