உலகக் கோப்பையில் ஈக்வடோர் அணிக்கு எதிராக மெக்சிகோ பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 2-0 என்ற வெற்றியை மெக்சிகோ நகரில் கொண்டாடியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 19 வயதுப் பெண் உட்பட மேலும் மூவர் உயிரிழந்தனர்.
உயிரிழந்த மற்ற இருவர் 48 வயதுப் பெண் மற்றும் 44 வயது ஆண் ஆவர். கூட்ட நெரிசலில் மேலும் பத்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
40 வருடத்திற்கு பின்னர் படைக்கப்பட்ட சாதனை
மெக்சிகோ தற்போது ஒரு உலகக் கோப்பை போட்டியின் நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 1986-ஆம் ஆண்டிற்குப் பிறகு மெக்சிகோ நொக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

தலைநகரில் உள்ள சுதந்திர தேவதை நினைவுச்சின்னத்தைச் சுற்றி லட்சக்கணக்கான மெக்சிகன் ரசிகர்கள் வெற்றியைக் கொண்டாடக் கூடினர்.
மெக்சிகோ நகர மேயர் கிளாரா ப்ருகடா, வெற்றிக் கொண்டாட்டங்களின் போது உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

Source: https://ibctamil.com/article/three-die-in-stampede-during-football-celebration-1782996690

