சமூக வெளியிலே தற்காலத்தில் பேசப்படும் விடயங்களில் பெண்கள் தொடர்பான விவகாரங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
குறிப்பாக, பெண்கள் தொடர்பாக நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் அதிகம் இலங்கையிலும் பதிவாகி வருகின்றது.
இந்நிலையிலே நாட்டிலுள்ள சட்டம், ஒழுங்குகள் பற்றி அறிந்திருக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே இருக்கி்னறது.
முன்னதாக சமூக ஊடக பாவனை குறைவாக இருந்தபோது வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி இருக்கவில்லை. ஆனால், தற்போது ஒருவரின் மீதுள்ள காழ்பபுணர்ச்சியில் எந்த விடயங்களையும் இலகுவாக பதிவிடக்கூடிய நிலையே காணப்படுகின்றது.
ஆகவே, நாட்டில் உள்ள சைபர் குற்றச்சட்டங்கள் மற்றும் அதிலுள்ள முக்கிய விடயங்கள் குறித்து கீழ்வரும் காணொளியில் விரிவாகக் காணலாம்….

