யாழில் உடல் சுகயீனம் ஏற்பட்ட இளைஞர் ஒருவர் நேற்றையதினம்(2) திடீரென உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி தெற்கு, கைதடி பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் தேனுசன் (வயது 29)
என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவருக்கு கடந்த 31ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் 1ஆம் திகதி மாலை
நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை
இந்தநிலையில் இரவு 7 மணிக்கு சாவகச்சேரி ஆதார
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம்
போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

