ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை (ETF), கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சைக்குத் தோற்றும் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்காக “நிபுணதா சவிய” என்ற புதிய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய மாணவர்களுக்கு அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த நிதி கடனாக அல்ல, எனவே அதனை மீளச் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவில் (TVEC) பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனங்களில், தேசிய தொழிற்கல்வித் தகுதி (NVQ) நிலை 3, 4 மற்றும் 5-க்கு உட்பட்ட 100 தொழிற்பயிற்சி பாடத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து மாணவர்கள் இந்த உதவியைப் பெற முடியும்.
மாணவர்களின் தொழில்திறனை மேம்படுத்தி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறும் வகையில் அவர்களைத் தயார்ப்படுத்துவதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கமாக ETF தெரிவித்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான மேலதிக தகவல்களை மாணவர்களும் பெற்றோரும் www.etfb.lk என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

