யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் இன்று திடீரென மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் தடை காரணமாகப் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இருப்பினும், தடையை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், இன்று மதியம் 12.00 மணியளவில் மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/power-supply-cut-in-many-parts-of-jaffna-1789881739

