மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(16) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்குறித்த பகுதியில் சம்பவ தினமான இன்று அதிகாலை குறித்த
சிறுமி அறையில் இருந்து காணாமல் போயுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தநிலையில் அவரை தேடிய போது வீதியில் இளைஞன் ஒருவருடன் இருப்பதை கண்டு இருவரையும் பிடித்து பொலிஸாரிடம்
ஒப்படைத்தனர்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் 17 வயது
சிறுவனை கைது செய்ததுடன் குறித்த சிறுமியை வைத்திய பரிசோதனைக்காக
வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் பெண்கள் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

