தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மலையக அரசாங்க பிரதிநிதிகளிடையே ஒரு
நிலையற்ற தன்மை காணப்படுவதாக இலங்கை மலையக இந்து குருமார்
ஒன்றியத்தின் ஸ்தாபக பொதுச் செயலாளரும் சிவஸ்ரீ வேலு சுரேஸ்வர சர்மா தெரிவித்துள்ளார்.
இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியத்தின் பொது கூட்டம் இன்று (27) கொட்டகலையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

காதலியின் வீட்டுக்கு சென்ற இளைஞர் மாயம்
சம்பள உயர்வு
”சம்பள விடயம் என்பது வருகின்ற தேர்தலை குறிவைத்து ஆடுகின்ற ஒரு கபட நாடகமாகும். எங்கள் தொழிலாளர்களை விளையாட்டு பொம்மைகளாக அவர்கள் பார்க்கின்றனர்.

மலையகத்தில் இன்று தேயிலை
தோட்டங்களிலும் இறப்பர் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பாடுபடுகிறார்கள்
அவர்களுக்கு சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு இன்றுள்ள அமைச்சர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் தவறியுள்ளார்கள்.
அதற்காக
நாங்கள் ஆழ்ந்த கவலையும் வெளியிடுகிறோம்.
ஆகவே முதலாளிமார் சம்மேளனத்துடனோ
அல்லது அரசாங்கத்திடமோ பேசி அவர்களுக்கான நியாயமான சம்பளத்தனை பெற்றுத்தர
அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் அமைச்சர்களும் அரசியல் தலைமைகளும்
முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

கல்முனையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மலையக குருமார்கள்
அதே வேளை இன்று மலையகத்தில் இருக்கின்ற
குருமார்களுக்கு காணியோ நிலமோ கிடையாது.
அவர்களுக்கு எந்த வித
எதிர்ப்பார்ப்புமின்றி சமய சேவைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

ஏனைய
சமயங்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படுகின்ற சலுகைகள் வசதிகள் இவர்களுக்கு
கிடைப்பதில்லை
இவர்களுக்கு இருப்பது கோயில் நிர்வாகத்தினால்
அமைத்துக்கொடுக்கின்றன ஒரு சிறிய தற்காலிக வீடுகளே.
எனவே ஏனையவர்களுக்கு
கிடைக்கும் உரிமைகள் சலுகைகள் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும் இது குறித்த
நாங்கள் சம்பந்தப்பட்ட பல அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளோம்.
அரசியல்
பேதமின்றி அனைத்து மலையக தலைவர்களுடன் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளோம்.
ஆகவே இந்திய விடமைப்பு திட்டத்தில் பெற்றுக்கொடுக்கப்படுகின்ற வீடுகளில் இந்து
குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அப்படி இல்லாவிட்டால் அவர்களுக்கு
காணித்துண்டாவது பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என கூறிள்ளார்.

சிக்சர் மழை பொழிந்த டெல்லி அணியின் ஆட்டம்: மும்பைக்கு இமாலய இலக்கு
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

