யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல வைத்தியசாலையான யாழ். போதனா வைத்தியசாலையின் மீது தற்போது மற்றுமொரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
கை முறிவிற்காக அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியொருவர், யாழ். போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தாதியர் ஒருவரின் நடவடிக்கைகள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
தன்னுடன் அனுமதியாகியிருந்த நோயாளி ஒருவரிடம் குறித்த தாதி, ”எதற்காக வந்துள்ளாய், நீ சாகத்தான் போகின்றாய் என்ற கடும் வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இதனால் மனமுடைந்து போன நோயாளி தன்னிடம் கூறி கவலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை மீது அண்மைகாலமாகவே பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது இந்த சம்பவமும் பதிவாகியுள்ளது.
மேலும் குறித்த தாதியின் செயற்பாடுகள் தொடர்பாக நோயாளி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை தொடரும் காணொளியில் காணலாம்.
யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |
https://www.youtube.com/embed/-VB77edQ4Dw