முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா

காஸாவில் நடைபெற்று வரும் போருக்கு மத்தியில் இந்தியா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்பெயின் கடற்கரையில் நிறுத்தப்பட்ட ஒரு சரக்குக் கப்பலில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுக்கு (IDF) 30 தொன்களுக்கும் அதிகமான ரொக்கெட்டுகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்ததை முதன்மையான செய்தி ஊடகமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தக் கப்பல் தென்கிழக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு, போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் உள்ள அஷ்டோத் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது.

ஹவுதி தாக்குதல்கள்

செங்கடலில் தொடர்ச்சியான ஹவுதி தாக்குதல்களைத் தவிர்ப்பதற்காக இந்த கப்பல் ஆபிரிக்காவைச் சுற்றி வந்தது.

இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா | India Exports Rockets Explosives Israel Gaza War

அதேவேளை பலஸ்தீன கொடிகளை ஏந்தி துறைமுகத்தில் திரண்ட மக்கள், இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகத்தின் அடிப்படையில் கப்பலை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இடதுசாரி உறுப்பினர்கள் சிலர் ஸ்பெயின் அதிபருக்கு எழுதிய கடிதத்தில் தொடர்புடைய கப்பலானது ஸ்பெயின் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரியிருந்தனர்.

காஸா போர்

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றப்பட்ட கப்பலை அனுமதிப்பது என்பது பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்காக தற்போது விசாரணையில் உள்ள ஒரு நாட்டிற்கு ஆயுதங்களை கொண்டு செல்வதை அனுமதிப்பதாகும் என அந்த 9 உறுப்பினர்களும் குறிப்பிட்டிருந்தனர்.

இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா | India Exports Rockets Explosives Israel Gaza War

இதனிடையே அந்த கப்பல் ஸ்பெயினில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. தற்போது வெளியான தரவுகளின் அடிப்படையில், அந்த கப்பலில் இந்தியா அனுப்பிய ஆயுதங்கள் என்றே உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் திகதி சென்னையில் இருந்து தொடர்புடைய கப்பலானது இஸ்ரேல் நோக்கி புறப்பட்டுள்ளது. அதில், 20 தொன் ரொக்கெட் என்ஜின்கள், வெடிக்கும் தன்மை கொண்ட 12.5 தொன் ரொக்கெட், 1,500 கிலோ வெடிப் பொருட்கள், 740 கிலோ பீரங்கிகளுக்கான வெடிப் பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

இராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி

மே 21ம் திகதி மீண்டும் சென்னையில் இருந்து ஆயுதங்களுடன் புறப்பட்ட கப்பலானது ஸ்பெயின் துறைமுகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கு ரகசியமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்த இந்தியா | India Exports Rockets Explosives Israel Gaza War

27 டன் வெடிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம், மோதல்களைத் தீர்ப்பதில் இராணுவ நடவடிக்கை தீர்வல்ல என்று நீண்டகாலமாக ஆதரிக்கும் ஒரு நாட்டில் இருந்து ஆயுதங்கள் இரகசியமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது என்றே கூறுகின்றனர்.

மேலும், ஜூன் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மன்றத்தில் கூடாரங்கள் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலுக்கு பயன்படுத்திய குண்டுகள் அனைத்தும் இந்திய தயாரிப்பு என்றே அம்பலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.