ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புலமைப்பரிசில்
நிகழ்ச்சித்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்குரிய புலமைப்பரிசில் திட்டத்தில்
முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு வலையங்களிலும் 922 மாணவர்கள்
உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.
இந்த மாணவர்களுக்கான புலமைபரிசில் திட்டம் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும்
18ஆம் திகதி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி கலையரங்கில்
நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள்
முல்லை வலயத்தில் 472 மாணவர்களும் துணுக்காய் வலயத்தில் 450 மாணவர்களும்
தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.