முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ்

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் சம்பளப்
பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் தேவையான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் ரூ. 1700 வரை இன்று (12)
முதல் உயர்த்துவதற்கு சம்பளக் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்ததாக இலங்கை
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் நாயகம் வடிவேல் சுரேஷ் (Vadivel Suresh) குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் சம்பளப்
பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்கியமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு
தோட்டத் தொழிலாளர்களுகள் மரியாதை செலுத்துவதாக கொழும்பில்
இடம்பெற்ற “ஒன்றிணைந்து வெல்வோம்” ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே அவர் கூறியள்ளார்.

ஆசிரியர் உதவியாளர் நியமனம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு பாடுபட்ட முன்னாள்
தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

சம்பள பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரணில்: நன்றி தெரிவித்த வடிவேல் சுரேஷ் | Solution Plantation Workers Salary Vadivel Suresh

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் பிரச்சினைக்கு அப்பால் தோட்ட வீட்டுப்
பிரச்சினை மற்றும் தோட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனம் போன்றவற்றை தீர்க்கவும்
ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக சுரேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (12) முற்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தோட்டத்
தொழிலாளி ஒருவருக்கு 8 பேர்ச்சஸ் காணி உரிமையை வழங்குவதற்கு இணக்கம்
காணப்பட்டதாகவும், ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அதே உரிமை
கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

2300 தோட்ட ஆசிரிய உதவியாளர் நியமனங்களை வழங்குவதற்கு எழுந்துள்ள பிரச்சினைகளை
தீர்த்து பின்னர் விரைவில் அந்த நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுப்பதாக
ஜனாதிபதிஉறுதியளித்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.